பெரம்பலூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன. 15) அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் வே. சாந்தா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுக் கடைகள், அத்துடன் இணைந்த மதுக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.