பால் வண்டி மோதி விவசாயி சாவு

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் பால் வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தார். 

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் பால் வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தார். 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியைச் சேர்ந்தவர் மூவாண்டி மகன் செல்லதுரை (42). விவசாயி. இவர், திங்கள்கிழமை ஆலத்தூர் கேட்டில் இருந்து பாடாலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். 
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது, பாடாலூரில் இருந்து பால் கேன்களை ஏற்றிச்சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில், பலத்த காயமடைந்த செல்லதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் தெரணி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் லோகநாதனை (30) கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com