முன்னாள் படைவீரர்கள்  பாதுகாவலர் பணிக்கு  விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புனித தலங்கள் மற்றும் திருக்கோயில்களில் இரவுநேர பாதுகாவலராகப் பணிபுரிய முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆட்சியர் வே. சாந்தா.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புனித தலங்கள் மற்றும் திருக்கோயில்களில் இரவுநேர பாதுகாவலராகப் பணிபுரிய முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புனித தலங்கள் மற்றும் திருக்கோயில்களில் இரவுநேர பாதுகாப்பு பணிக்கு தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.  எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளத்தில் பணி அமர்த்தப்படுவர்.
எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் படை விலகல் சான்று மற்றும் முன்னாள் படைவீரரின் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன், உதவி இயக்குநர், மாவட்ட முன்னாள் படைவீரர் நலன், 72-ஏ, புதிய மார்க்கெட் வீதி, அரியலூர் - 621 704 எனும் முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, 04329-221011.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com