பெரம்பலூரில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்

பெரம்பலூர் மண்டல அளவிலான 61-ஆவது குடியரசு தின தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  

பெரம்பலூர் மண்டல அளவிலான 61-ஆவது குடியரசு தின தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் உடற்கல்வித்துறை சார்பில், பெரம்பலூர் மண்டல அளவிலான 61-ஆவது குடியரசு தின தடகளப் போட்டிகளை பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
போட்டிகளை, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரேவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா.  சந்திரகாசி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.  இதில், பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 880 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.   100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டம், 4 100 ரிலே, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கோலூன்றி தாண்டுதல் உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் 14, 17, 14, 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.  தொடர்ந்து, இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  
முதல் 2 இடங்களைப் பிடித்தவர்கள் மாநில தடகளப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதிபெற்றுள்ளனர்.   நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) புகழேந்தி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் அம்பிகாபதி (பெரம்பலூர்), செந்தமிழ்ச்செல்வி (வேப்பூர்), 
உடற்கல்வி ஆய்வாளர்கள் கஜேந்திரன் (அரியலூர்), அமலிடெய்சி (கரூர்), மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com