பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே 9 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை குன்னம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
குன்னம் வட்டம், ஒதியம் கிராமத்தை சேர்ந்த 9 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகன் பாலசுப்பிரமணியன் (53), கடந்த 14 ஆம் தேதி, வீட்டில் இருந்த சிறுமியை வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதனால், அந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மையெனத் தெரியவந்தது. பின்னர், பாலசுப்ரமணியனை கைது செய்து விசாரணை செய்கின்றனர்.