சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற தகுதியானவர்கள் அக். 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக, சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் பொற்கிழியும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2018 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரைத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன், பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அக். 31 ஆம் தேதிக்குள் ஆட்சியருக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.