பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 6 இடங்களில் அமைக்கப்பட்ட மழை அளவிடும் கருவிகள் செயல்பாட்டுக்கு வந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், பாடாலூர், செட்டிக்குளம், வேப்பந்தட்டை, தழுதாழை ஆகிய 5 இடங்களில் மட்டுமே மழை அளவிடும் கருவிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆலத்தூர் வட்டத்தில் 2 இடங்களிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் 2 இடங்களிலும் பெரம்பலூர் வட்டத்தில் ஒரு இடத்திலும் மழை அளவிடும்
கருவிகள் அமைக்கப்பட்டிருந்தன.
குன்னம் பகுதி விவசாயிகள் உள்ளிட்டோரின் தொடர் கோரிக்கையின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதலாக 6 இடங்களில் மழை அளவிடும் கருவிகள் அண்மையில் அமைக்கப்பட்டன. குன்னம் வட்டத்தில் லப்பைக்குடிகாடு, அகரம் சீகூர், புதுவேட்டக்குடி ஆகிய இடங்களிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் எறையூர், வி.களத்தூர், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களிலும் புதிதாக மழை அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டன. மேற்கண்ட இடங்களில் அமைக்கப்பட்ட மழை அளவிடும் கருவிகள் முதன்முறையாக மழை அளவை பதிவு செய்தன.
புதன்கிழமை காலை 8 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,) செட்டிக்குளம் - 2, பெரம்பலூர் - 25, வேப்பந்தட்டை- 3, தழுதாழை - 7, பாடாலூர்- 2, எறையூர்- 4.1, லப்பைக்குடிகாடு - 24, அகரம் சீகூர் - 0, கிருஷ்ணாபுரம் - 2, வி.களத்தூர்- 1, புதுவேட்டக்குடி- 17. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 7.92 மமில்லி மீட்டர் எனப் பதிவாகியுள்ளது அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.