குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

பெரம்பலூரில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூரில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 335 மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.  தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மணாவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் வே.சாந்தா பரிசு  வழங்கினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com