எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு: அனுமதி சீட்டை இன்று முதல்  ஆன்லைனில் பதிவிறக்கலாம்

எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வெழுதும் தனித்தேர்வர்கள், தங்களது அனுமதி சீட்டுகளை ஆன்லைன் மூலம் சனிக்கிழமை

எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வெழுதும் தனித்தேர்வர்கள், தங்களது அனுமதி சீட்டுகளை ஆன்லைன் மூலம் சனிக்கிழமை (செப். 15) முதல் பதிவிறக்கலாம் எனத் தெரிவித்தார் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) புகழேந்தி. 
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உள்பட) சனிக்கிழமை பிற்பகல் முதல் w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்னும் இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கலாம். தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றுவதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  
மேலும், அறிவியல் பாடத்துக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் செப். 18 முதல் செப். 20 வரை நடத்தப்படும் 10 ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் பங்கேற்று செய்முறைத் தேர்வெழுத வேண்டும். இத்தேர்வர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com