தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வருகிற 25 -ஆம் தேதி முதல் நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுகை அருகே திருவரங்குளத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் காமராஜ், பொருளாளர் துரை. அரங்கசாமி உள்ளிட்டோர் பேசினர். ஒன்றியச் செயலர் பிச்சைமுத்து வரவேற்றார். ஒன்றியப் பொருளாளர் பத்மலீலா நன்றி கூறினார்.