நெடுவாசல் போராட்டத்தில் பெண்கள் அங்கப்பிரதட்சணம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து 11-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து 11-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே ஏப். 12-ஆம் தேதி அப்பகுதி மக்கள் 2-ஆம் கட்டமாக தொடங்கிய போராட்டம் 11-வது நாளான சனிக்கிழமையும் தொடர்ந்தது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.
தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தரையில் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com