பொன்னமராவதியில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலர் அ. நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம். சின்னதுரை, மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. ஜீவானந்தம், ஒன்றியச் செயலர் பி. ராமசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ். நல்லதம்பி, கே. ராஜா, என். பக்ரூதீன்,பி. சிங்காரம், பி. குமார், என். பிச்சையம்மாள், எம். நாவலர் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பொன்னமராவதி ஒன்றியம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் பிரச்னையைத் தீர்க்க காவிரிக் குடிநீர் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுத்து கொண்டுவர வேண்டும். பொன்னமராவதி ஒன்றியப் பகுதியில் உள்ள கண்மாய்கள், வரத்துவாரிகளை உடனடியாகத் தூர்வார வேண்டும். சேதமடைந்து காணப்படும் அண்ணாநகர், இந்திராநகர் சாலைகளைச் சீரமைக்க வேண்டும். வலையபட்டி பாப்பாயி அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். அண்ணாநகர் அருகிலுள்ள சுடுகாட்டை மின்மயானமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com