அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் வரும் 25-ம் தேதி விவசாயிகள் பிரச்னைக்காக திமுக மற்றும் அனைத்துக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி எம்எல்ஏ சிவ. வீ. மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டக் குழு உறுப்பினர் மு. முத்துராமலிங்கன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் மு. மாதவன், காங்கிரஸ் மாவட்டத் துணைச் செயலர் மகாதேவன், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலர் இரா. திருமாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் பேசியது:
விவசாயிகளின் பிரச்னைகளுக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. ஆகவே விவசாயத்தை காப்பாற்ற இப்பகுதி வணிகர்கள் முழுமையாகக் கடையடைப்பு செய்து ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக்கொண்டார்.
திமுக தெற்கு ஒன்றியச் செயலர் பொன். கணேசன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலர் எஸ். அப்துல்ஹமீது, மார்க்சிஸ்ட் தாலுகா செயலர் தென்றல் கருப்பையா, இந்திய கம்யூ. ஒன்றியச் செயலர் ஆ. ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ஆவணத்தான்கோட்டை கருணாநிதி, நாட்டுமங்கலம் மதி,மறமடக்கி அன்பரசு, தொழுவங்காடு சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாங்குடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.