விநாயகரிடம் முறையிட்டு நெடுவாசலில் போராட்டம்

புதுக்கோட்டை  மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரச மர விநாயகரிடம் முறையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை  மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரச மர விநாயகரிடம் முறையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும்  திட்டத்தை எதிர்த்து, மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து நெடுவாசல் நாடியம்மன் கோயிலில் 122-வது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் , திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, போராட்டக்களத்தின் அருகேயுள்ள அரச மர விநாயகரிடம் திட்டத்தை ரத்து செய்யக்கோரி  மாலை அணிவித்து, தீபம் ஏற்றி முறையிட்டு வழிபாடு நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com