திமுக தலைவர் கலைஞரின் 94-ஆவது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைரவிழாவை ஆகியவைகளை முன்னிட்டு அறந்தாங்கியில் 94 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அறந்தாங்கி நகரச் செயலாளர் இரா. ஆனந்த் தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். ரகுபதி 94 பேருக்கு வேட்டி சேலை மற்றும் வீட்டு உபயோகப்பொருள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உதயம் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ஆர்.கே.கலைமணி, முன்னாள் நகரச்செயலாளர் க. இராஜேந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.எம். சீனியார் மற்றும் நிர்வாகிகள் கோ. சக்திவேல், என்.கே.எஸ். சாகுல்ஹமீது, வின்சென்ட் ராஜேந்திரன், வி.சி. செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.