அறந்தாங்கி நகரில் சாலைகளை செப்பனிட நுகர்வோர் மன்றம் கோரிக்கை

அறந்தாங்கி நகரில் சாலைகளை செப்பனிட வேண்டும் என நுகர்வோர் மன்றக்  கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அறந்தாங்கி நகரில் சாலைகளை செப்பனிட வேண்டும் என நுகர்வோர் மன்றக்  கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நுகர்வோர் சங்கத்தின் கூட்டம் அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை தலைவர்  கி. சிவக்குமார் தலைமையில், செயலாளர் இர.அப்துல் ரகுமான் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்,
அறந்தாங்கி நகரில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்காத காரணத்தால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தி வாகனங்கள் விபத்தின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்; அறந்தாங்கி நகரில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நிர்வாகிகள் எஸ்.வெங்கட்ரமணி, தி.பார்த்திபன், பி.சிவராமன், கே.மோகனசுந்தரம்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com