நாட்டின் 72 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆண்டுதோறும் சுதந்திரதின விழா ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். விழாவில், போலீஸார், தீயணைப்புத் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.
அரசுத் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவதோடு, அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழாண்டில் சுதந்திர தினவிழாவுக்கான முன்னேற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மைதானத்தை தயார் செய்து, கொடிக்கம்பத்தில் வர்ணம் பூசும் பணி ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து, போலீஸார், தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.