பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் மற்றும் வைரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆடிப்படையல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேலத்தானியம் அடைக்கலம்காத்தார் கோயிலில் நடைபெற்ற ஆடிப்படையல் விழாவில் அடைக்கலம் காத்தார், தொட்டிச்சி அம்மன், கொங்கனிசித்தன், சன்னாசி, பட்டானி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஆலவயல் வைரம்பட்டி பிஞ்சமலையான் மற்றும் சாவக்காரன்கோயில் ஆடிப்படையல் விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவிலும் திரளான மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.