இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் சார்பில் 30 நாள் இலவச 'அழகுக்கலை பயிற்சி' அளிக்கப்படுமென அறிவித்துள்ளது.
இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குநர் ஆர். சரண்யா வெளியிட்ட தகவல்:
கிராமப் புறத்தைச் சேர்ந்த, படித்து வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்கள் மகளிர் தொழிற்பயிற்சி அளித்து அவர்கள் சுயதொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி மையம் சார்பில் மதிய உணவு, தரமான குறிப்பேடு ஆகியவற்றும் தொழிற்பயிற்சி அளித்து அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறோம். தற்போது 'அழகுக்கலை பயிற்சி' குறித்து 30 நாட்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில் சேர விரும்பும் 18 வயது முதல் 40 வயதும், 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மகளிர் 3 புகைப்படங்கள், மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகிய நகல்களுடன் செல்லிடப்பேசி எண் ஆகியவைகளைக் குறிப்பிட்டு 28.8.2017 ஆம் தேதிக்குள், நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், 1506/2, மேல நான்காம் வீதி, திலகர் திடல், புதுக்கோட்டை. 622 001 - என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04322 - 225 339 , 70109 57772.