ஆசிரியர் மனைவியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

அரியலூர் ரயில் நிலையம் அருகே நடந்துச் சென்ற ஆசிரியர் மனைவியிடம் 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

அரியலூர் ரயில் நிலையம் அருகே நடந்துச் சென்ற ஆசிரியர் மனைவியிடம் 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மதுரை மாவட்டம், புதுக்கோட்டையை அடுத்துள்ள நாகமலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்திலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியாரக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா(32) . வெள்ளிக்கிழமை மாலை இவர், மதுரை செல்வதற்காக அரியலூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து ஒத்தையடி பாதையில் ரயில் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், சுதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அரியலூர் ரயில்வே போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com