ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் ரெத்தினாவதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் பங்கேற்று பேரிடர் நேரங்களில் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.