கந்தர்வகோட்டையில் குளத்தில் குளிக்க வந்த முதியவர் தவறிவிழுந்து புதன்கிழமை உயிரிழந்தார்.
கந்தர்வகோட்டை ஊராட்சி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் ( 80). கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுக்கும் வேலை செய்து வந்தார்.
இவர் நாள்தோறும் கந்தர்வகோட்டை ஐயப்பன் கோயில் எதிரில் இருக்கும் வங்காரஓடை குளத்தில் குளிப்பது வழக்கம். இதேபோல், புதன்கிழமை காலையில் குளிப்பதற்கு வந்தவர், நிலைதடுமாறி
குளத்தினுள் விழுந்து உயிரிழந்தார்.