பேச்சுப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வென்ற  சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வென்ற  சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில்,  சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர் மணிகண்டன் முதலிடம் பெற்று,  ரூ. 10 ஆயிரம் பரிசு பெற்றார்.அவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை அரியலூர் மண்டல இயக்குநர்   சிவசாமி பரிசு வழங்கினார். 
இதன் மூலம் மாநில பேச்சுப் போட்டிக்கு மணிகண்டன் தகுதி பெற்றார்.  சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அவர் நான்காம் இடம் பிடித்தார்.
மாணவர் மணிகண்டனை கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன்,  செயலாளர் மு.விஸ்வநாதன், முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு, அனைத்து துறைத் தலைவர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com