பொன்னமராவதி அருகேயுள்ள அம்மன்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் மகளிர் குழுக்களுக்கு ரூ. 12.30 லட்சம் கடன் புதன்கிழமை வழங்கப்பட்டது.
இடையாத்தூர் பிடாரிஅம்மன் மகளிர் சுய குழுவுக்கு ரூ. 3.70 லட்சம், சொக்கநாதபட்டி ரோஜா மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ. 3.60 லட்சம், அம்மன்குறிச்சி மதுரைவீரன் மகளிர் குழுவுக்கு ரூ. 3 லட்சம், சடையம்பட்டி அழகப்பெருமாள் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 12.30 லட்சம் கடனை சங்கத் தலைவர் அ. பழனியப்பன், சங்கச் செயலர் அ. செல்வம் ஆகியோர் வழங்கினர்.