தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை காலை வீட்டருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை காலை வீட்டருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் ஊராட்சி அரண்மனைத்தோப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன்  திவகாரன்(3) .  வீட்டருகே இவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த சுமார் 4 அடி தண்ணீர்த் தொட்டியில்  தவறிவிழுந்து இறந்தான். இதைக் கவனிக்காத அவரது  பெற்றோர் வெகுநேரமாக சிறுவனைக் காணவில்லையென பல இடங்களில் தேடினர். பின்னர் சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் இறந்து கிடந்தது தெரியவந்தது. வடகாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com