ஊராட்சிகளில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு 30 சத ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா சிலை அருகே சங்கத்தின் மாவட்டச் செயலர் க. முகமதுஅலிஜின்னா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு 30 சத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், துப்புரவுப் பணியாளர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடைக்கான அரசாணையை வெளியிட வேண்டும். 3 ஆண்டு பணிமுடித்த தொகுப்பூதிய துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் ப. சண்முகம், நிர்வாகிகள், ராமசாமி, திரவியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.