புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை போக்குவரத்து மண்டல அலுவலகம் அருகே தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச்செயலர் எம். வேலுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து கழகத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும், 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.இதில் பல்வேறு தொழிற்சங்கத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.