அன்னவாசல் அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அன்னவாசல் அருகேயுள்ள நிலையப்பட்டி வெள்ளாற்றில் அடிக்கடி மணல் அள்ளப்படுவதாக புல்வயல் விஏஓ ரமேஷுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நிகழ்விடம் சென்ற அவர் வெள்ளாற்றுப் பகுதியில் மணல் அள்ள நின்ற ராசு மகன் அன்பு பாண்டியனுக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, மேல் நடவடிக்கைக்காக கோட்டாட்சியருக்கு பரிந்துரைத்தார்.