தீபா அணியில் கட்சிப் பணிக்கான விருப்ப மனு

பொன்னமராவதியில் ஜெ. தீபா அணி சார்பில் கட்சிப் பணிக்கான விருப்ப மனு ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்டது.

பொன்னமராவதியில் ஜெ. தீபா அணி சார்பில் கட்சிப் பணிக்கான விருப்ப மனு ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்டது.
பொன்னமராவதியில் ஒன்றிய ஜெ. தீபா அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலர் எம். ஹஜ் முகம்மது அலி தலைமைவகித்தார். தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் வி. கண்ணன், வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் வி. பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஜெ. தீபா அணியில் கட்சிப் பணியாற்ற விருப்ப மனுக்கள் தொண்டர்களிடமிருந்து பெறப்பட்டது. மேலும், ஒன்றியத்திற்கு உள்ட்ட 42 ஊராட்சிகளிலும் தீபா அணி கிளைகள் அமைப்பது, அனைத்து  உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து ஜெ. தீபா அணியை வலுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
ஒன்றிய துணைச் செயலர் ராஜா முகமது, நகரப் பொறுப்பாளர் ஆறுமுகம், உறுப்பினர்கள் அழகு,  சேகர், ராசு, கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com