பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கக் கோரிக்கை

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி,  உயர்நிலைப் பள்ளிகளில் அரசாணைப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடத்தை வழங்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வுக்கூடத்துக்கு உபகரணங்கள் வழங்குவதுபோல, விளையாட்டு  உபகரணங்களும் வழங்க வேண்டும். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29 ஆம்  தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் காசிராஜேந்திரன் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நடைபெறும் சிறப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகே ஒவ்வோர் ஆண்டும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். ஆனால், நிகழாண்டு சிறப்புத் தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதைக் கண்டித்து கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com