வேந்தன்பட்டி வங்கியில் தீ விபத்து

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி அரசுடைமை வங்கிக் கிளையில் நேரிட்ட தீ விபத்தில் கணினி மற்றும் தளவாடச் சாமான்கள் எரிந்து சேதமடைந்தன.

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி அரசுடைமை வங்கிக் கிளையில் நேரிட்ட தீ விபத்தில் கணினி மற்றும் தளவாடச் சாமான்கள் எரிந்து சேதமடைந்தன.
வங்கி மேலாளர் அறையில் சனிக்கிழமை இரவு மின்கசிவால் தீப்பற்றியுள்ளது.  இதில், கணினி, கேமரா  மற்றும் தளவாடச் சாமன்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷடவசமாக முக்கிய ஆவணங்கள் எதுவும் சேதமடையவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொன்னமராவதி தீயணைப்புத் துறையினர் சென்றுள்ளனர். ஏற்கெனவே தீ அணைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com