jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை

"சிவநெறியை உலகறியச்செய்தவர் திருஞானசம்பந்தர்'

By DIN  |   Published on : 18th July 2017 07:30 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

சிவநெறியை உலகறியச்செய்தவர் திருஞானசம்பந்தர் என்றார்  காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தழிழாய்வுத் துறை இணை பேராசிரியர் முனைவர் கிருங்கை  சொ.சேதுபதி.
புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற திருமுறை மாநாட்டின் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று  "தமிழ் ஞானசம்பந்தரின் சொல்லோவியம்'  என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
சோழ வளநாட்டுச் சீர்மிகு சீர்காழி திருத்தலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகவாகத் தோன்றியவர் திருஞானசம்பந்தர். அவரது பாடல் இசை வழி பிறந்து எல்லாவற்றையும் இசைவிக்கிறது. இறைவனையும் ஈர்த்து வசமாக்கிறது.  செந்நாப்புலவர்  ஏந்திய செழுந்தமிழைத் தெய்வத் தமிழாக உணர்கிறார், உணர்விக்கிறார்.  எனவே நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தப்பெருமான், தன் திருவுளத்தில் எழுந்தொளிரும் இறைவனைப் பதிகங்கள் தோறும் பற்பல கோணங்களில் சொல்லோவியமாகப் படைத்துக் காட்டுகிறார்.  நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பதினாறு ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்ந்து பணி பல செய்தார். தலங்கள் தோறும் சென்று பதினாறாயிரம் பாடல்கள் பாடினார். ஆனால் அவற்றில் நமக்கு இப்போது கிடைத்துள்ளவை 383 பதிகங்களே என்றார் சொ. சேதுபதி.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்  மா.சிதம்பரம்  பங்கேற்று "தமிழ் ஞானசம்பந்தர் காட்டும் எழிலார்ந்த இயற்கைச் சூழல்' என்ற தலைப்பில் பேசியது:
சைவ சமய திருமுறைகள் பன்னிரண்டு என வகுக்கப் பெறும். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகளைப் பாடிய பெருமை திருஞானசம்பந்தரைச் சேரும். தென்னாடு செய்த தவப்பயனாய் பிறந்த ஞானசம்பந்தரின் தேவாரத்துள் இறையனுபவமும், இயற்கைச் சார்ந்த வருணனைகளும் இடம் பெற்றுள்ளன. ஐம்பூதங்கள் இயற்கை, ஐம்பூதங்களின் சேர்க்கையான உலகமும் இயற்கை.  ஓரறிவுயிர் முதல் அனைத்தும் இயற்கை எனினும் ஆறறிவுடைய மனிதன் தன் அறிவாலும், செய்கையாலும் இயற்கையின் இயல்பு நிலையிலிருந்து மாறி அமைவதால், மனிதன் நீங்கலாகப் பிற இயற்கையாக எண்ணப்படுகின்றன. தமிழர் இயற்கையையே இறைவனாகப் போற்றிய தகைமையை உடையோர் ஆவர். இவ்வுலகின் கண் காணப்படும் இயற்கைச்சூழல் அனைத்தும் தமிழர் தம் கண்களுக்கு இறைமையின் வடிவமாகத் தோன்றியதால் அவ்வியற்கைச் சூழலிருந்து தம் இறைவனைக் கட்டமைத்துக் கொண்டனர். இதனை, பழந்தமிழர் இயற்கையை உயர்ந்த பொருளாக, அதாவது கடவுளாகக் கொண்டு வாழ்ந்தனர். தேவாரம் பாடிய மூவருள், இயற்கையில் தம் இதயத்தைப் பறிகொடுத்தது, மிகுதியும் இயற்கையைப் பாடியவர் என்னும் பெருமை ஞானசம்பந்தரையே சாரும் என்றார்.
முன்னதாக, தேவாரப்பாடல் ஒப்பித்தல் போட்டியில் வென்ற பள்ளி மாணவிகள் 10 பேரில் முதல் 2 இடங்களில் வென்ற 6 பேருக்கு தங்கம், வெள்ளிக்காசுகளும், பிற மாணவிகளுக்கு நூல்களும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர்  சுப்பையா தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதையடுத்து, பிற்பகலில் திலகவதியார் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகரன் தலைமையில் நடந்த நிறைவு விழாவில்,  பூம்புகார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அகரமுதலன், தஞ்சை வேங்கிடசாமிநாட்டார் கல்லூரியின் செயலர் ரா. கலியபெருமாள், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலாதொண்டைமான் ஆகியோர் பேசினர். இதில், பேராசிரியர்கள் அய்க்கண்,  சேதுராமன் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் மு. ராமுக்கண்ணு, புண்ணியமூர்த்தி, சா. ராமதாஸ், ஜி.எஸ். தனபதி, எஸ்விஎஸ். ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர். முன்னதாக,  ஆடிட்டர் அண்ணாமலை வரவேற்றார். காசி நன்றி கூறினார்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்

வீடியோக்கள்

தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்