இராணுவப் பணியில் சேரும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் நோக்கில் தொகுப்பு நிதியிலிருந்து மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: இத்திட்டம் கடந்த 1.4.2015 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. முப்படையில் நிரந்தர படை அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு தொகுப்பு மானியமாக ரூ.1 லட்சமும் , குறுகிய கால படை அலுவலராக பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு தொகுப்பு மானியமாக ரூ.50 ஆயிரமும், இளநிலை படை அலுவலர்கள், இதர பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு தொகுப்பு மானியம் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.