கந்தர்வகோட்டையில் ஜூன் 20 மின்தடை

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கந்தர்வகோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கந்தர்வகோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய புனல்குளம் உதவிச் செயற்பொறியாளர் மணிமுத்து தெரிவித்துள்ளது: கந்தர்வகோட்டை அருகே உள்ள புனல்குளம் தொகுப்பு துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி, சமுத்திரப்பட்டி, புதுநகர், துருசுப்பட்டி, முதுகுளம், குளத்தூர் நாயக்கர்பட்டி, காடவராயன்பட்டி, நடுப்பட்டி, சேவியர் குடிகாடு, பருக்கைவிடுதி, மங்கனூர், விராலிப்பட்டி, வடுகப்பட்டி, வாண்டையாம்பட்டி, கொத்தம்பட்டி, மேய்க்குடிபட்டி, பிசானத்தூர், பழைய கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com