போலீஸாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

மாநிலப் போட்டியில் பங்கேற்கும் காவல் அதிகாரிகள், போலீஸாருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி புதுக்கோட்டை அருகே நடைபெற்று வருகிறது.

மாநிலப் போட்டியில் பங்கேற்கும் காவல் அதிகாரிகள், போலீஸாருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி புதுக்கோட்டை அருகே நடைபெற்று வருகிறது.
போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் போலீஸார் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக மத்திய மண்டலத்திற்கு உள்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மத்திய மண்டலத்தின் சார்பில் 23 போலீஸார் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் புதுக்கோட்டை நார்த்தாமலை அருகேயுள்ள போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com