கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி புதுகை கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் புதன் கிழமை மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி புதுகை கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் புதன் கிழமை மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா பல்லவராயன்பத்தையில் பணியாற்றி வரும் அண்ணாதுரை கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளியதைத் தடுத்தார். அப்போது,  அவர் மீது மாட்டு வண்டி ஏற்றிக் கொல்ல முயற்சி செய்த சம்பவம் மேலும் தொடராமல் இருக்கவும்,  இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை
ஞதடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத்தலைவர் சுப. உலகநாதன் தலைமை வகித்தார்.
மாநில அமைப்புச்செயலர் டி. மகேந்திரன், மாவட்டச்செயலர் ம. பாண்டியன், பொருளர் செந்தில்குமார் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com