புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சுப்பிரமணியன் என்பவர் நடத்தி வந்த கடையில் புதன்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது.
அருகிலிருந்தோர் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் தீ அருகில் இருந்த மருந்துக்கடையிலும் தீ பரவியதில் பொருட்கள் சேதமடைந்தன. தகவலறிந்து அங்கு வந்த புதுக்கோட்டை தீயணைப்புத்தறையினர் சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.