கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த பிசானத்தூர் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் தீ குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை சுற்று வட்டார பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பிசானத்தூர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.