புதுகை காந்தி பூங்காவில்  உலக யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், எஸ்விஎஸ்,ஹீரோ மோட்டர்ஸ்,  ஆனந்த யோகா பவுண்டேசனும் இணைந்து

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், எஸ்விஎஸ்,ஹீரோ மோட்டர்ஸ்,  ஆனந்த யோகா பவுண்டேசனும் இணைந்து நடத்திய "சிபு யோகா சிகிச்சை முகாம் "புதுக்கோட்டை காந்தி பூங்காவில்  காலை 6 மணி முதல் 8 மணி வரை  நடைபெற்றது.
ஆட்சியர்  சு. கணேஷ்  தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. லோகநாதன்  யோகா பயிற்சியைத் தொடங்கி வைத்தார். இதில், நிர்வாகி எஸ்விஎஸ். ஜெயகுமார், ரோட்டரி தலைவர்ஆரோக்கியசாமி, துணை ஆளுநர் மோகன்ராஜ்,  முன்னாள் நீதிபதி பிச்சை, ரோட்டரி நிர்வாகிகள்,  ஆனந்த யோகா சங்க உறுப்பினர்கள்  அய்யாவு,  காசிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில்  ரோட்டரி சார்பில் தயாரிக்கப்பட்ட சர்வதேச யோகா தின நூலை   ட ஆட்சியர் வெளியிட்டார்.
விராலிமலை... விவேகா பள்ளியில் தாளாளர் வெல்கம்மோகன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.   இதில், 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆ ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வஜ்ராசனம், பத்மாசனம், சூரியநமஸ்காரம், மூச்சு பயிற்சி உள்ளிட்ட யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com