புதுக்கோட்டை
பூதகுடி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்
விராலிமலை அருகே மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. விராலிமலை ஒன்றியம் , பூதகுடி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள்
விராலிமலை அருகே மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. விராலிமலை ஒன்றியம் , பூதகுடி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமுக்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் செல்வராஜ் தலைமை வகித்தார்.விராலிமலை வட்டாட்சியர் என். செல்வநாயகம், சமூக நலத்திட்ட வட்டாட்சியர் லூர்துசாமி முன்னிலை வகித்தனர்.
இதில், கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட 29 மனுக்கள் பெறப்பட்டு 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 4 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், துணை வட்டாட்சியர் காமராஜ், கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.