மத்திய அரசால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் அரிமளம் சிவக்கமலம் பள்ளி மாணவர்கள் பல்வேறு நிலைகளில் வென்று பரிசுகளை வென்றுள்ளனர்.
மத்திய அரசின் மின்சார துறை சார்பாக "எரிபொருள் சிக்கனம்' என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 2016-ல் நடைபெற்ற ஓவியப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் த.பாரத், யோகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளனர். மாணவர்களை பள்ளியின்,தாளாளர் சபரி தங்கவேல், பள்ளியின் முதல்வர் கி.குமார் ஆகியோர் வாழ்த்தினர்.