புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (30.6.2017) காலை 10 மணியளவில் புதுகை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் சு.கணேஷ், தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
எனவே, புதுகை மாவட்ட விவசாயிகள் இம்முகாமில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்
என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.