கந்தர்வகோட்டையில் குரங்குகளால் மக்கள் அவதி

கந்தர்வகோட்டையில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கந்தர்வகோட்டையில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கந்தர்வகோட்டையில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குரங்குகள் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் உள்ள பொருள்களை தூக்கிக்கொண்டு ஓடிவிடுவதும், விரட்டும் பெண்களைத் துரத்தி கடிக்க வருவதும், மின்சார வயர்களை பிடித்துத் தொங்கி அறுத்துவிடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு குரங்கு பிடிப்பவர்கள் மூலம் குரங்குகள் கூண்டுவைத்து பிடிக்கப்பட்டு நெடுந்தொலைவில் உள்ள காட்டுப் பகுதிகளில் விடப்பட்டன. எனினும், அவை மீண்டும் குட்டிகளுடன் கூட்டமாக சுற்றிவந்து பொதுமக்கள், பெண்களை அச்சுறுத்தி வருகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com