குடிநீர் கேட்டு மறியல்

புதுக்கோட்டை அருகே நத்தம்பண்ணை ஊராட்சியில் நிலவும் குடிநீர்த்தட்டுப்பாட்டைக் கண்டித்து, அப்பகுதி  மக்கள் காலிக்குடங்களுடன்

புதுக்கோட்டை அருகே நத்தம்பண்ணை ஊராட்சியில் நிலவும் குடிநீர்த்தட்டுப்பாட்டைக் கண்டித்து, அப்பகுதி  மக்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால், திருச்சி - புதுகை  நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  புதுகை நகராட்சியின் அருகேயுள்ள நத்தம்பண்ணை ஊராட்சியைச் சார்ந்த கரிசல்பாறை,எம்.கே.நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 1 மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் புதன்கிழமை புதுகை - திருச்சி நெடுஞ்சாலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையப் பகுதியில் காலிக்குடங்களுடன் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருக்கோகர்ணம் காவல் நிலைய ஆய்வாளர் பி. தமிழ்மாறன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச்சென்று சாலைமறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com