கோயில் வசூலில் முறைகேடு: ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோயிலில் பக்தர்களிடம் பெறும் நன்கொடையில் நடைபெறும் மோசடியை

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோயிலில் பக்தர்களிடம் பெறும் நன்கொடையில் நடைபெறும் மோசடியை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டுமென அண்மையில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுகை ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், அசோக்ராஜ் ஆகியோர் அளித்த மனு: பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோயிலுக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு ஆடு, கோழிகளை பக்தர்கள் நேர்ந்துவிடுவதோடு, ரொக்கமாக நன்கொடையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கோயில் நிர்வாகிகள், கோயிலில் வேலை செய்பவர்கள் ஒன்றுசேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவதாகத் தெரியவருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் முறைகேடுகள்  ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com