ஆசிரியர் தகுதி தேர்வுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வியாழக்கிழமை கடைசி நாளாகும். ஒட்டுமொத்தமாக, மாவட்ட அளவில் இதுவரை முதல் தாளுக்கு 6,845-ம், 2 ஆம் தாளுக்கு 14,284 என மொத்தம் 21,129 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் மார்ச் 6 முதல் தொடங்கியது. புதுகை மாவட்டத்தில் சுமார் 30 இடங்களில் ரூ.50-க்கு விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. மார்ச் 22 ஆம் தேதியுடன் விண்ணப்பம் விநியோகம் முடிவடைந்தது.
புதுகை வடக்கு ராஜ வீதியில் உள்ள (நகர் மன்றம் அருகில்) அரசு உயர்நிலைப்பள்ளியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதேபோல், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் ஐடியல் பள்ளியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.