ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அச்சங்கத் தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற சங்கத்தின் 10-ஆம் ஆண்டு பேரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் திருநாவுகரசு வேலை அறிக்கை படித்தார். பொருளாளர் ஆரோக்கியசாமி, சிறப்பு அழைப்பாளராக திருச்சி மண்டல தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.