பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனர்.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மாங்காட்டைச் சேர்ந்த ராமன் மகன் மோகன் (எ) மணிவாசகம் (28). புதுக்கோட்டை ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ஜெயகுமார் மகன் பாலாஜி. இவர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்தனர்.
இவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் ஆலங்குடி பகுதியில் இருசக்கர வாகனத்திருட்டு வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த இருசக்கரவாகனங்களை  போலீஸார் பறிமுதல் செய்து இருவரையும் திருச்சி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. லோகநாதன் பரிந்துரையின் பேரில் இருவரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com