புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கோட்டை புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அக்னிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுகை சிப்காட் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் சத்தியமங்கலம் பிரதான சாலை, இரும்பாளி, வெள்ளனூர், உடையாளிப்பட்டி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி, இச்சடி வடவாளம், கேடயப்பட்டி, காயம்பட்டி, புதுக்கோட்டை நகரில் பள்ளத்திவயல், சிப்காட், அடப்பன்வயல், மச்சுவாடி தொழில்பேட்டை, சாத்தப்பாநகர், சமத்துவபுரம், நரிமேடு ஆகிய பகுதிகளில் மே 20-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4. 45 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
பொன்னமராவதியில்....
பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் காரையூர், கீழத்தானியம், சடையம்பட்டி, மரவாமதுரை, அரசமலை, நல்லூர், கொன்னையம்பட்டி மற்றும் மேலத்தானியம் பகுதிகளில் சனிக்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.