கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் காத்திருக்கும் போராட்டம்

கந்தர்வகோட்டை வட்டாட்சியரகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தர்வகோட்டை வட்டாட்சியரகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ. ராமையன் தலைமை வகித்தார். வட்டக்குழுச் செயலர் வி. ரெத்தினவேல், மாவட்டக் குழு உறுப்பினர் பி. வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசியோர், வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விளைநிலங்களுக்கும் நிவாரணம் அளித்து, பயிர்க்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்தல், பொது விநியோக திட்டத்தை முறைப்படுத்துதல், ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருட்களையும் வழங்குதல், நீட் தேர்வை ரத்து, 100 நாள் வேலையை 200 நாள்களாக ஆக்குதல், தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும்
குடிநீர் பிரச்னையைத் தீர்த்து, சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com